Sunday, 26 April 2020

அஞ்சுகொத்து மறவர்

அஞ்சுகொத்து மறவர் 

தமிழகத்தில் வாழும் மறவர் இனத்ததின் ஒரு பிரிவினர் ஆவர்.அஞ்சுகொத்து மறவர்கள் திருவாடனை பகுதி அஞ்சுகோட்டை கிராமத்தை தாய் கிராமமாக கொண்டவர்கள் ஒரு காலத்தில் அது அஞ்சுகோட்டை நாடாக இருந்தது.முற்கால பாண்டியர்களான இவர்கள் சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மன்னர் குடும்பங்களுக்கே ‘பஞ்சாயத்து’ செய்யும் வல்லமை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அஞ்சுகோட்டை என்கிற ஊரைத் தலைமையாகக் கொண்டு ‘நாடு’ கட்டமைப்பில் உறுதியானவர்கள் இவர்கள்.

கிளைகள்

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை சார்ந்தது.

இதை பெண் வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும். ஆதாவது தகப்பன்(தொண்டைமான்) கிளையும் மகன்(பாஞ்சாலன்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் அஞ்சுகொத்து மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் பிள்ளைகளுக்கே சம்பந்தம் செய்வர்.
அஞ்சுகொத்து மறவர்களின் கிளைகள் :
1.தாது வாண்டார் கிளை
2.மனோகரன் கிளை
3.வீரன் கிளை
4.அமரன் கிளை
5.வடக்கை கிளை
6.தொண்டமான் கிளை
7.நாச்சாண்டி கிளை
8.கோபாலன் கிளை
9.பாஞ்சாலன் கிளை
10.அறியாதான் கிளை
11.நங்கண்டான் கிளை
12.பிச்சா கிளை
13.குண்டன் கிளை
14.வீரவேட்டை கிளை
15.தனிஞ்சா கிளை
16.மங்கள கிளை
பழக்கவழக்கம்
அஞ்சுகொத்து மறவர் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி , திருவாடானை வட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் , தேனி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

No comments:

Post a Comment