Tuesday, 8 August 2017

அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு

கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு
இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.
செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.
1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு......திருக்கானப்பேர்க்கூற்றத்து
2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி
3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை    நாடாழ்வார் தேவி
4 . ...வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா
நன்றி-ஆவணம்-1993,ப.26  S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)

கிளை முறைகளும்--மறவர் குல பழவழக்கமும்

கிளை முறைகளும்--மறவர் குல பழவழக்கமும்

கிளைகள் என்றால் என்ன?


அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம்.
கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே.
கிளை என்பது பென்னை சார்ந்தது.
இதை பென் வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னின் கிளையே சாரும்.
ஆதாவது தகப்பன்(வெட்டுவான்) கிளையும் மகன்(தருமர்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.
ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் செம்பி நாட்டு மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவாம் எனவே தன் மக்க்ளுக்கே சம்பந்தம் செய்வர்.


மறவரின் வகைகளும் கிளைகளும்:

38 பிரிவுகள்:
நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம் வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி, வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரிய10ர், வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது, கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.



அஞ்சுகோட்டை (அஞ்சுகொத்து) மறவர்களின் கிளைகள் :
------
1. தாது வாண்டார் கிளை...

2. மனோகரன் கிளை
3. வீரன் கிளை
4. அமரன் கிளை
5. வடக்கை கிளை
6. தொண்டமான் கிளை
7. நச்சாண்டியார் கிளை
8. கோபாலன் கிளை
9. பாஞ்சாலன் கிளை
10. அறியாதான் கிளை
11. நங்கண்டான் கிளை
12. பிச்சை கிளை
13. குண்டன் கிளை
14. வீரவேட்டை கிளை


காரன [சக்கரவர்த்தி] மறவர்.
1.தேவன்
2.ராயர்
3.பன்டயன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்

செம்பிநாட்டு மறவர்:
1.மரிக்கா
2.பிச்சை
3.தொண்டமான்
4.கட்டூரான்
5.கருப்புத்திரன்
6.சீற்றமன்
7.தனிச்சன்
ஆறு நாட்டு வடாகை மறவர்:
1.பொன்னன்
2.சீவலவன்
3.பீலிவலன்
4.கொட்டுரான்
5.நம்புனார்
6.குழிபிறை

உப்புகட்டு மறவர்:
1.புரையார்
2.குட்டுவான்
3.கொம்பன்
4.வீரயன்
5.கானாட்டன்
6.பிச்சை தேவன்
7.கோனாட்டன்

கார்குறிச்சி மறவர்:
1.நம்பியன்
2.மழவனார்
3.கொடிபிரியான்
4.படைகலைசான்
5.கூற்றுவ
6.குத்துவான்

பட்டம்கட்டி மறவர்:
1. காஞ்சிவனத்தார் - காஞ்சி கிளை
2. குட்டினி கிளை - கானாட்டான் கிளை 
3. காவடி கிளை - மின்னாட்டன் கிளை
4 . பெயரில்லா கிளை - வெட்டுவான் கிளை 
5. தோப்பர் கிளை - குத்துவான் கிளை
6. ஆட்டுக்குட்டி கிளை - குருகுலத்தான் கிளை

7. நயினார் சர்க்கரவர்த்தி கிளை - சர்க்கரவர்த்தி கிளை  
கொண்டையன் கோட்டை கொத்தும் கிளையும்:
1.    மருதசா கிளை (மறுவீடு)
அகத்தியர் கிளை    கற்பகக் கொத்து
2.    வெட்டுவான் கிளை
அழகுபாண்டியன் கிளை     முந்திரியக் கொத்து
3.    வீணையன் கிளை
பேர் பெற்றோன் கிளை    கமுகங்கொத்து
4.    சேதரு கிளை
வாள் வீமன் கிளை    சீரகக் கொத்து
5.    கொடையன் கிளை
அரசன் கிளை    ஏலக்கொத்து
6.    ஜெயங்கொண்டர் கிளை
வீரமுடிதாங்கினார் கிளை    தக்காளி கொத்து
7.    சங்கரன் கிளை
சாத்தாவின் கிளை    மிளகுக் கொத்து
8.    ஒளவையார் கிளை
ஜாம்பவான் கிளை    தென்னங்கொத்து
9.    நாட்டை வென்றார் கிளை
தருமர் கிளை    மல்லிகை கொத்து
10.  வன்னியன் கிளை
  -வெற்றிலை கொத்து
அன்புத்திரன்
11.  சடைசி கிளை
                        -ஈசங்க்கொத்து
 பிச்சிபிள்ளை கிளை
12.   லோகமூர்த்தி
                      -பனங்க்கொத்து


அனைத்து உட்பிரிவு மறவர்களுக்கும் கிளை இருக்கும் .கால போக்கில் மறந்துஇருப்பர். நமது தொகுப்பில் 50 கிளைகள் மற்ற மறவரில்
50 கிளைகள்:
செம்பியன், வெட்டுவன், விரமண், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக் குழைத்தான், மரிக்கார், வடக்கு அறியாதான், கோபாலன் மங்கலம், சுதந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கிளியான், வீணியம், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மறுவீடு, வாப்பா, நச்சாண்டி அமர், கருப்பத்திரன், வெட்டியனர், மாப்பானசம்பந்தன், செற அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப்பிறைகெங்கண்டா, பாச்சாலன், காலா, இராக்கி, வன்னிபண்டாரம், விடிந்தான், கருகளத்தான், வேம்பளத்தான், மகுடி, அம்பியுடுக்கி, அடுகலை, எருமை குளத்தான், கீரைக்கடியான், இத்தி, விளித்திட்டான், வயநாடுவெம்பக்கடி, கொண்டையன் கோட்டையார்.

திருவாடானை பாண்டியர்கள்

திருவாடானை பாண்டியர்கள்
(அஞ்சுகொத்து மறவர்கள்)
உ.மீனாட்ச்சி துனை
"காரார் குழலி பவள செவ்வாய்ச்சி
கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள்
திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர்
போற்றும் பைரவி யாழ்"-கொற்றவை மீனாட்சி

"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)

"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)

"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:142)

அஞ்சுகோட்டை (அஞ்சுகொத்து) மறவர்களின் கிளைகள்


அஞ்சுகொத்து மறவர் 

தமிழகத்தில் வாழும் மறவர் இனத்ததின் ஒரு பிரிவினர் ஆவர்.அஞ்சுகொத்து மறவர்கள் திருவாடனை பகுதி அஞ்சுகோட்டை கிராமத்தை தாய் கிராமமாக கொண்டவர்கள் ஒரு காலத்தில் அது அஞ்சுகோட்டை நாடாக இருந்தது.முற்கால பாண்டியர்களான இவர்கள் சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மன்னர் குடும்பங்களுக்கே ‘பஞ்சாயத்து’ செய்யும் வல்லமை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அஞ்சுகோட்டை என்கிற ஊரைத் தலைமையாகக் கொண்டு ‘நாடு’ கட்டமைப்பில் உறுதியானவர்கள் இவர்கள்.

கிளைகள்

அகராதியில் இந்தச் சொல்லுக்கு வம்சம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இந்த வம்சத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லுவதுதான் கோத்திரம். கிளை என்பது திருமண நிகழ்ச்சிகளுக்காக உருவாக்க பட்டது. ஒரே கிளை சார்ந்த ஆனும்,பென்னும் உறவினர்கள் ஆகவிடினும் சகோதர உறவு முறையே. கிளை என்பது பெண்ணை சார்ந்தது.

இதை பெண் வழி சேரல் என கூறுவர். பென்னுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெண்ணின் கிளையே சாரும். ஆதாவது தகப்பன்(தொண்டைமான்) கிளையும் மகன்(பாஞ்சாலன்) கிளையும் இருக்கும் காரணம் அவ்விருவரின் தாய் எக்கிளையோ அக்கிளையே இருவரும்.ஒரே கிளை சார்ந்த இருவருக்கும் திருமனம் கூடாது வேறு கிளையுடனே பன்னவேண்டும். இதில் அஞ்சுகொத்து மறவர்கள் சகோதிரியின் மகளை திருமனம் செய்வது கிடையாது காரணம் அது மருமகள் உறவு எனவே தன் பிள்ளைகளுக்கே சம்பந்தம் செய்வர்.
அஞ்சுகொத்து மறவர்களின் கிளைகள் :
1.தாது வாண்டார் கிளை
2.மனோகரன் கிளை
3.வீரன் கிளை
4.அமரன் கிளை
5.வடக்கை கிளை
6.தொண்டமான் கிளை
7.நாச்சாண்டி கிளை
8.கோபாலன் கிளை
9.பாஞ்சாலன் கிளை
10.அறியாதான் கிளை
11.நங்கண்டான் கிளை
12.பிச்சா கிளை
13.குண்டன் கிளை
14.வீரவேட்டை கிளை
15.தனிஞ்சா கிளை
16.மங்கள கிளை
பழக்கவழக்கம்
அஞ்சுகொத்து மறவர் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி , திருவாடானை வட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் , தேனி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.